Thursday, October 9, 2008

சங்கமம்...

புத்தகச் சுமை தாங்கி தாங்கி
புன்னகைக்க மறந்த இதயங்கள்
கூடித் தரும் புதிய பரவசம்...
அது சங்கமம்...

பேனை பிடித்துப் பிடித்து
மரத்துப்போன எம் கைவிரல்கள்
படைக்கும் இன்னுமோர் பிரவசம்...
அது சங்கமம்...

புதிதாய் கிடைத்து விட்ட உறவுகளின்
படைக்கத் துடிக்கும் இதயங்களின்
புத்தம் புதிய படைப்புக்கள்...
அது சங்கமம்...

நிலவையும் தாண்டி நீண்டு செல்லும்
நெடிய தமிழ் கொண்டு
நடை போடும் புதுப்பயணம்...
அது சங்கமம்...

இரத்தமும் சதையும் நித்தம் நித்தம்
பார்த்து சலித்துப்போன
எம் மனங்களின் ஒரே சந்தோசம்...
அது சங்கமம்..

-எஸ்.சங்கர்-
மட்டம் 04
பொறியியல் பீடம்

No comments: